ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிக்கும் ‘ரோமியோ’ படத்தின் பாடல் வெளியீடு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன், மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிப்பில் வெளிவர இருக்கும்ரோமியோபடத்தின் முதல் பாடல்செல்லக்கிளிவெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  படத்தில் இருந்து வெளியாகியுள்ள தனது முதல் பாடல் குறித்து பரத் தனசேகர் பேசியிருப்பதாவது, ”என்அன்பு நண்பர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவிநடிப்பில் வெளிவரவிருக்கும்ரோமியோதிரைப்படத்திற்கு நான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்ததில்மகிழ்ச்சியடைகிறேன்.ஆன்மாவைத் தூண்டும்செல்லக்கிளிபாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த்பிரகாஷ், ஜெனிஃபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.*********

இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த ட்யூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம்.  இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யாஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக அழகியபுடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்தஇசைசெல்லக்கிள்ளிபாடலுக்கு உயர்தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசைவாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மேலும், இசையமைப்பாளராக எனது முதல் படம் இதுஎன்பதால் பொறுப்பாகவும் அதே சமயம் உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்தப் படத்தின் ஆடியோஉரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. அவர்களின் முழுஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும்நன்றி. அவர்கள் எங்கள் மீதுவைத்த நம்பிக்கை மிகப்பெரிய விஷயம்என்றார்.  

பாடல் குறித்து அவர் மேலும் பேசியிருப்பதாவது, “’செல்லக்கிளிபாடல் இந்தப் படத்தின் சாராம்சத்தைபிரதிபலிப்பது மட்டுமல்லாமல், எனது இதயத்திலும் தனி இடம் இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப்பாடலுக்குத் திறமையான எனது குழு, முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின்ஃபைனல் ரிசல்ட் அற்புதமாக வந்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை மட்டும் பிரதிபலிக்காமல்வலுவான அன்பையும் இது உணர்த்தும். மெல்லிசை, தாளம் மற்றும் உணர்ச்சி ஆழத்தாலும் அன்பின்வலிமையாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதை இந்தப் பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. கதைசொல்லலை மேம்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று நான் நம்புகிறேன். ’செல்லக்கிளிஇந்தஅனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.  

ரோமியோபடத்திற்கு அறிமுக இசையமைப்பாளராக இருப்பது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகஇருந்தது. மேலும் முழு படக்குழுவினரும் வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி. இந்தவாய்ப்பு எனது கலை அடையாளத்தை வெளிப்படுத்தவும் இசையின் மூலம் கதை சொல்லும் முறையையும்எனக்கு கற்றுக் கொடுத்தது. ’செல்லக்கிளிபாடலுக்கு ரசிகர்கள் எப்படி வரவேற்புக் கொடுக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நன்றி. ’ரோமியோபடத்தின் வெற்றிக்கு எனது இசையும் முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சிஎன்றார்.