மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் 2.10.2019 அன்று புதன் கிழமை மதிமுகவைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு.சு.மு.சிவசாமி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, கழக அமைப்புச் செயலாளரும், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருமான டாக்டர் ஊ. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.