அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்

அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ஜெக்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறையினர் முடக்கினார்கள். இந்திய அரசின் அனு மதி பெறாமல் சிங்கப்பூரிலுள்ள சில்வர் பார்க் இன்டர்ஷேனல் நிருவனத்தில் ரூ.80 கோடியே 19 லட்சத்திற்கு ஜெகத்ரட்சகனும் அவரது மகன் சபீப்ஆனந்தும் முதலீடு செய்துள்ளார்கள். இந்த முதலீடு செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமது பெறாமல் செய்திருந்ததை அமலாக்கத்துறையின் கண்டுபிடித்தனர். இதனால் தமிழகத்திலுள்ள ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் விவசாய நிலங்கள் உள்பட ரூ.89 கோடியே 19 லட்சத்திற்கான அசையா சொத்துக்ளை அமலாக்கத்துறையின் முடக்கினார்கள. அத்துடன் அவரது குடும்பத்தினர்களின் வங்கிக்கணக்குகளையும் முடக்கினார்கள்.