கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி.

தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணமும், சமூக அமைதியை கெடுக்கும்வண்ணமும் திட்டமிட்டு பேசியும், பதிவிட்டும் வரும் பாரதிய ஜனதா பிரமுகர் கல்யாண ராமன் போன்ற சமூகநச்சுச் செடிகள் சட்டத்தின் மூலம் பிடிங்கி எறியப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக நேசிக்கக் கூடியஅண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் குறித்து மிகவும் ஆபாச பேச்சுக்களை பேசி அனைவரது உணர்வுகளையும்வெகுவாக புண் படுத்தியுள்ளார் பாஜக பிரமுகர் கல்யாண ராமன். இதேபோன்று தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டும், பேசியும் வருகிறார். பலமுறை கைது செய்தும் அவரது இத்தகைய வன்ம போக்கை, சமூக அமைதியை கெடுக்கும் போக்கை அவர்கைவிடவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து மக்களை மதத்தின் பேரால் பிரித்து அரசியல்ஆதாயம் தேடும் நச்சு நோக்கத்தோடு இத்தகைய பேச்சை பேசி உள்ளார் என சந்தேகம் எழுகிறது. இவரைப்போன்ற சமூகத்தில் நச்சை விதைக்கும் நச்சு செடிகள் சட்டத்தின் மூலம் பிடிங்கி எறியப்பட வேண்டும்.

இவரது பேச்சால் காயப்பட்ட சகோதரர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல சகோதர இந்து சமூக மக்கள் கிறிஸ்தவ சமூக மக்கள் என அனைவரும் இவரதுபேச்சை கண்டித்து வருகிறார்கள். எனவே, உடனடியாக தமிழக அரசு கல்யாணராமன் போன்ற சமூக அமைதிக்கு கேடு விளைவிப்பவர்களைசட்டத்தின் கடும் பிடிக்கு உட்படுத்தப்பட வேண்டும். கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது அறிக்கயில் கூறியுள்ளார்.