கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்

இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ. தமிழ்மணி மற்றும் அதிகாரிகளும், தி.மு.க., நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.