கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
————————————————


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமின் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய மருந்துகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு 18.07.2020 அன்று வழங்கினார்.
———————————————–