கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள்

கோவிட்19 நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணியைப் பாராட்டி உதவும் வகையில் இன்று ரூபாய் 25,000 இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவை புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்புத் தலைவர் முனைவர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது, பேராசிரியர் இக்பால், துணை முதல்வர் முனைவர் கமால் நாசர் முன்னிலையில் முதல்வர் முனைவர் பஷீர் அஹமது அவர்கள் த.மு.மு.க. மருத்துவ அணி தலைவர் கலீல் அஹமது மற்றும் T.M.M. ஷேக் தாவூத் அவர்களிடம் 05.10.2020 அன்று திங்கட்கிழமை காலை வழங்கப் பட்டது.