தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40% முதல் 35% என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் வந்தது அப்பொழுது பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டது
அதே போல பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்றும் தனியார் பள்ளிகள் தரப்பில் நேற்று உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. அதே போல கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் எனவும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார். அதே போல தமிழகத்தில் உள்ள CBSE பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிட்டப்படும் என அறிவித்தது. இன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலித்து கொள்ளை தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் எனவும்.. கடைசி தவணையை 2.2.2022க்குள் செலுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.