திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி கடன் வழங்கிட சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25000 மானியமாக வழங்கப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் இவ்வலுவலகம் வந்து இத்திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431-2412590-யை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்