திருமாவளவனை கண்டிக்க தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற குஷ்பு கைது

விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த நடிகை குஷ்பு அறிவித்திருந்தார். இதனால் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையிலிருந்து கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாக சிதம்பரம் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.