தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்!

மதுரை 21, மே:- மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தோப்பூர் மருத்துவமனையின் பொறுப்பாளர் காந்திமதிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.