மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.கே.சுப்ரமணியன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19.10.2020) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் மனவேதனை அளிக்கிறது.

தினமலர் சென்னை பதிப்பில் தனது பயணத்தை தொடங்கிய திரு.கே.சுப்ரமணியன், தினமணி நாளிதழில் 30 வருடம் பணியாற்றி, அதன்பின்னர் தினமலர் நெல்லை பதிப்பில் பணிபுரிந்து வந்தார். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த திரு.கே.சுப்ரமணியன் அவர்கள் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினராக இருந்து வந்தவர்.சென்னை நிருபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் .

அன்னாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. அவரை இழந்து வாடும் நண்பர்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய ஏராளமான பத்திரிகையாளர்கள் என அனைவருடனும் சென்னை பத்திரிகையாளர் மன்றமும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

பாரதிதமிழன்
இணைச்செயலாளர்.
சென்னை பத்திரிகையாளர்மன்றம்.
19.10.2020