வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மீன் வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆர். அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.