25 மே. 2021; கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட; எம்.பி., தயாநிதி மாறன்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் எழும்பூர் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார். உடன் திமுக பகுதிக் கழகச் செயலாளர்கள் சொ.வேலு,  ஜெ.விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிக்காக அண்ணா நகர் சட்டமன்றத் உறுப்பினர் எம்.கே.மோகன் ஏற்பாட்டில் 26 கிருமிநாசினி தெளிப்பான் வாகனங்களை சென்னை மாநகராட்சிக்கு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வழங்கினர். உடன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, துறைமுகம் தொகுதி, 57வது வட்டம், ஜட்காபுரம், ஆதிஆந்திரா, வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் 1000 நபர்களுக்கு மதிய உணவினை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் வழங்கினர்.