ரமணா கம்யுனிகேஷன் தயாரிப்பில் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கலைச்சோழன், தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார், சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன், இந்துமதி, கார்த்தி, யாசர், ஹரிதா ஶ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “திருக்குறள்”. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாந்த்த திருவள்ளுவர் வளவநாட்டில் வாழ்ந்ததாக கூறுகிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். அத்துடன் திருவள்ளுவர் இயற்றிய அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகிய மூன்று பகுதிகளில் காமத்துப்பாலுக்கே முக்கியத்துவம் கொடுத்து அதை குமணன மன்னனின் ஆட்சியை இணைத்து ஒரு வணிகரீதியலான படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். பெற்றோர்கள் பார்த்து பிள்ளைகளுக்கு மணமுடித்து வைப்பது தமிழர்களின் கலாச்சாரமில்லை, மாறாக ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசி காதலித்து அதன்பின் திருமணம் செய்துகொள்வதே தமிழர்களின் கலாச்சரம் என்பதை அய்யன் வள்ளுவன் மூலம் சொல்கிறார் இயக்குநர்.
காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளுவதை அய்யன் வள்ளுவன் ஆதரித்தார் என்பதாகவும் இயம்புகிறார். அக்காலத்தில் புலவர்கள் மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவ்வாறு ஆலோசணை வழங்கி மன்னர்களை வழிநடத்திய பெருந்தகையாளர் அய்யன் வள்ளுவன் என்பதை அறியும்போது மனம் குளிர்கிறது. போரிடுவதும் கொடுங்குற்றங்களுக்கு கடுந்தண்டணை வழங்குவதும் அய்யன் வள்ளுவன் ஆதரித்தார் என்பதை இப்படத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். வீரமும் போரின் வியூவகமும் தமிழர்களின் உடன் பிறந்தவை என்பதை, அய்யன் வள்ளுவன் தந்த குறள்வழி வந்தவை என்பதை திரையில் காட்டியுள்ளார் இயக்குநர். கொடைவள்ளலாக அவதரித்த மன்னன் குமணன், வறியவர்களுக்கும் புலவர்களுக்கும் வாரிவாரி வழங்குகிறார். இப்படியே போனால் கஜானா காலியாகிவிடும் என்று யோசித்த குமணனின் தம்பி இளைய குமணன் அண்ணனை காட்டுக்கு அனுப்பிவிட்டு கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறான். அவனிடமிருந்து ஆட்சியை மீட்டு காட்டுக்குச் சென்ற குமணனுக்கு ஆட்சிப் பொறுப்பை அய்யன் வள்ளுவன் கொடுத்தாரா? காட்டுக்குச் சென்ற குமணன் என்ன ஆனார்? காதலர்களாக வனாந்தரத்தில் சுற்றித்திரிந்த பரிதியும் பவளக்க்டியும் என்ன ஆனார்கள்? என்பதுதான் கதை. இதில் அய்யன் வள்ளுவனாக நடித்த கலைச்சோழனின் தமிழ் உச்சரிப்பும் புன்சிரிப்பும் மாணக்களுக்கு பாடம் நடத்தும் விதமும் மிக அற்புதமாக இருந்தது. அவருக்கு இணையாக வாசுகியாக நடித்த தனலட்சுமி காமத்துப்பாலுக்கும் அறத்துப்பாலுக்கும் மிக பொறுத்தமாக நடித்திருந்தார். பரிதியாக நடித்திருக்க்ம் குணாபாபுவும் அவருக்கு காதலியாக பவளக்கொடியாக நடித்திருக்கும் பாடினியும் காமத்துப்பாலுக்கு ஏற்ற ஜோடிகள். காதலைன மார்போடு காற்று புகாதபடி இறுக அனைத்து, தன் மார்பகங்களை காதலனின் முதுகு புறத்தில் தடவித் தேடும் காட்சி இளைஞர்களுக்கு விருந்தாகியது. படத்தின் முன்பகுதி காமத்துப்பாலுக்கு விளக்கவுரையாக இருந்தாலும் படத்தின் பின்பகுதி அறத்துப்பாலுக்கு பொருட்பாலுக்கும் விளக்கவுரையாக திரைக்கதை பயணித்தது. உச்சக்கட்ட காட்சியில் பாண்டிய மன்னனின் முத்தமிழ் சங்கத்தில் திருக்குறள் நாலடி சீருக்கு மாறாக ஈரடியாக இருப்பதால் குறளை அரங்கேற்ற மறுக்கிறார்கள். அப்போது “எனது குறள் ஈரடி அல்ல, ஒன்னேமுக்கால் அடிதான். எனது குறள் மதுரை தமிழ் சங்கத்திற்காக எழுதப்பட்டதல்ல, உலக மக்களுக்காக எழுதப்பட்டது” என்று அய்யன் வள்ளுவன் கூறும் காட்சியில் பார்வையாளர்கள் திரையரங்கில் எழுந்து நின்று கைதட்டி ஆர்பரித்தார்கள். இளையராஜாவின் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலை ரசிகர்களுகு தூண்டியது. இனிமையான இசை தந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் இளையராஜா. தமிழர்களின் வரலாற்றை ஒரு காவியபடைப்பாக தந்திருக்கும் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல போற்றப்பட வேண்டியவர்.