“திரள்” திரைப்படம் செப்.19ல் வெளியீடு

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய கதை. 1000 ஆண்டுகள் கதை. கதையில் 700 கோடி புராஜெக்ட் முக்கிய இடம் பிடிக்கிறது! எஸ்.எம்..தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி.பி.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் ‘திரள்’ படத்தை மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், படத்தொகுப்பு மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அல்பியா மீராராஜ் இருவரும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்! க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷனோடு, விறுவிறுப்பாக செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது “திரள்”!