சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்வுக்கான போராட்டம் தான் “ஈகை”

இப்படத்தின் இயக்குனர்  அசோக் வேலாயுதம் எனும் நான்  இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்  மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி கொண்டு இருக்கிறோம் .  இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் முன்கதை மற்றும் உச்சக்கட்ட காட்சியைஇயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும் . இப்படத்தில்  ” ரோஷன் கனகராஜ் ” என்பவரை அறிமுகம் படுத்துகிறேன். மற்றும்  அருவி பாலா–ரூபினி மற்றும் 25 புதிய முகங்களை ஒரு முக்கிய கதாபத்திரத்தில் அறிமுகம் படுத்துகிறேன் . இப் படம் ஒரு பெண்னை மையப்படுத்திய படம் .கதையின் நாயகி அஞ்சலியுடன் சேர்ந்து ” சந்தோஷ் பிரதாப் – சுனில் – அர்ஜய் – பொன்வன்னன் – ஹரிஷ் பேரடி – அபிராமி – தீபா – புகழ் ” போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து கொண்டு வருகிறார்கள் .*****

இப்படத்தின் ஒளிபதிவாளர் ஸ்ரீதர் , இதற்க்கு முன் மயக்கம் என்ன – பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் ஒளிபதிவாளராக செய்துள்ளார் . மற்றும் விடாமுயற்சி – சரோஜா – ஆரண்யா காண்டம் போன்றது படங்களில் வேலை செய்து தேசிய விருதுவாங்கிய N . B . ஸ்ரீகாந்த்  தான் இப்படத்தின் எடிட்டர் .  மற்றும் காலா – கபாலி – சார்பாட்ட பரம்பரை – கேப்டன் மில்லர் – போன்ற படங்களின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இப்படத்தில் பணியாற்றியுள்ளார் . வசனம் எழுதியவர் டைரக்டர் . பரதன்.      தில் – தூள் – கில்லி – வீரம் போன்ற படங்களில் வசனம் எழுதியவர் .  இசை தரன் குமார் – ஸ்டண்ட் மாஸ்டர் சிறுத்தை கணேஷ் – பாடல்வரிகள்,கார்த்திக் தயாரிப்பு கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா கிருஷ்ணா க்ரியேஷன்ஸ் சமுக நீதி – அரசியல் பகுத்தறிவு –  பொருளாதாரம் இது மூன்றும்தான் ஒரு மனிதனை மேன்மைபடுத்தூம், அதை மைய்யப்படுத்தி உருவாகி கொண்டு இருக்கும் ஒரு படம் தான் ஈகை .