வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

முக்கூடல், ஆக. 30- வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து முக்கூடதல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவ குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, முக்கூடல் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் சார்ந்த படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு வேளாண் சார்ந்த தொழில் துவங்கி தொழில் முனைவோராக மாறவும், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் துவங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் தொகையில் ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் பட்டதாரிகள் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வேளாண் பட்டதாரிகள் வேளாண்மை துறையின் அக்சிஸ் நெட் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் உரிய ஆவணங்களுடன் முக்கூடல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.