அ இ அ தி மு க அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கழக மகளிர் அணியின் சார்பில், தலைமைக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (8.3.2024 – வெள்ளிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிமு. பழனிசாமி தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள்அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில், பெருந்திரளான மகளிர் அணியினர் திரண்டிருந்து அளித்தஉற்சாக வரவேற்பை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட கழகப் பொதுச் செயலாளர் மகளிர்அனைவருக்கும் தமதுசர்வதேச மகளிர் தின’’ நல்வாழ்த்துகளை பாசத்தோடு தெரிவித்துக் கொண்டார்.