நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் திறக்கப்பட்டது

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ்ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. மார்ச் 28 அன்று மீடியா மற்றும்இன்ஃபுளூயன்சர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு அல்லு அர்ஜூனுக்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக அமைந்தது.******

ஆறு முறை பிலிம்பேர் விருது வென்றவரும், இந்தியாவின் மதிப்புமிக்க தேசிய விருது பெற்றவருமான ஐகான்ஸ்டார், ‘கிங் ஆஃப் டான்ஸ்என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருக்கு காலத்தால் அழிக்க முடியாதமெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் இந்த மெழுகு சிலை அவரது புகழ்பெற்றபுட்டபொம்மாபாடலின்  கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அவரதுசின்னச் சின்ன நடன அசைவுகளைக் கூட எளிதில் கற்றுக் கொள்ளலாம்.