“ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது

அரபி புரடெக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,   நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரைப்படமான  ஃபைண்டர் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. *******

செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்தவழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார்என்பதாக பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும், ஒரு அட்டகாசமான திரில்லர் அனுபவம்இருக்கிறது  என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் எனநிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும்நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னைப் பின்னணியில்  இப்படத்தின்திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார்.  நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், கோபிநாத்சங்கர், நடிகை தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரை வெளியீட்டுப் பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகிறது.  Viyan ventures சார்பில் இயக்குநர்  வினோத் ராஜேந்திரன் இப்படத்தைவெளியிடுகிறார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுதிட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்  தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures  தயாரிப்பாளர்கள்ரஜீஃப்  சுப்பிரமணியம் &  வினோத் ராஜேந்திரன் இயக்கம்வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவுபாபு ஆண்டனி எடிட்டர்தமிழ்குமரன் கலை இயக்கம்அஜய் சம்பந்தம் இசைசூர்ய பிரசாத் மக்கள் தொடர்பு – A ராஜா