புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம்

மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும்ஒரு நொடிபடத்தின் பத்காகையை ஜிவிபிரகாஷ் குமார்  வெளியிட்டார்.தனஞ்செயன் இப்படத்தை  வழங்குகிறார். மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும்ஒரு நொடிபடத்தில் தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம் எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர்,  சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குனராக கே .ஜி ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை  கவனிக்கிறார் எஸ் ஜே ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ்குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.********

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குனர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதியதயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க  இந்தக் கூட்டணிஒருநொடிபடத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை  புதிய கோணத்தில்சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம். ஒரு நொடிபடத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வெகு மும்முரமாகநடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்தஅடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும். மக்கள் தொடர்பு : ஸ்ரீவெங்கடேஷ்.