அருண் விஜய் நடிப்பில் மூன்றாவது படைப்பு பூஜையுடன் துவங்கியது

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. பிக் யுனிவர்செல் நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண்விஜய் நடிக்கும் இப்படத்தை, கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக்ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.*********

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ்திரைத்துறையில் கால் பதித்துள்ளார். முன்னதாக இந்நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்துஇயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில்,  ஹாரர் திரைப்படமானடிமாண்டி காலனி 2” படமும், இயக்குநர் விக்ரம்ராஜேஸ்வர் இயக்கத்தில்,  நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ளசென்னை சிட்டி கேங்ஸ்டர்திரைப்படமும், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படைப்பினை பிரம்மாண்டமாகத் துவக்கியுள்ளது. தொடர் வெற்றிப்படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், அவரது36 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை, மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்இயக்குகிறார்.  இப்படத்தின் நிர்வாகப் பணிகளை டாக்டர் M.மனோஜ் பெனோ செய்கிறார்.

தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன்திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது