தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நாளை (15.07.2021)  100வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நாளை (15.7.2021) காலை 8.15 மணிக்கு, சென்னை, குரோம்பேட்டை தபால் அலுவலகம் அருகில், “கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி” நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து கொடியேற்றுகிறார்.
நாளை (15.7.2021) காலை 8.30 மணிக்கு, பல்லவபுரம் நகராட்சி அலுவலகம் அருகில்  கல்வெட்டு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து கொடியேற்றுகிறார். தோழர் என். சங்கரய்யா இல்லத்தில் நாளை (15.7.2021) காலை 8.45 மணிக்கு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு கொடியேற்றி உரையாற்றுகிறார்.