ரூ 24.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலை தொடர்ந்துஏர் அரேபியா விமானம் ஜி9-471மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய திருவாவூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி, 31, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவரை சோதனையிட்ட போதுஅவரது உடலில் இருந்து 602 கிராம் எடை கொண்ட தங்க பசை நான்கு பொட்டலங்களில் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்து ரூ 24.2 லட்சம் மதிப்புடைய 495 கிராம் எடை கொண்ட 24கேரட் தங்கம் எடுக்கப்பட்டுபறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.  இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.