அமைச்சர் பொன்முடி வழக்கில் உண்மையை கொண்டுவர தன்னையும் சேர்துக் கொள்ளவேண்டும் – டி.ஜெயக்குமார்

திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ்சாட்சியங்களாக மாறியதால், உண்மையை வெளிக்கொண்டு வர தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்என்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தின் போதுவிழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகஅதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டதில், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக திமுக அமைச்சர் பொன்முடி, பொன்முடியின் மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமானகௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், மகேந்திரன், சதானந்தன், குமார், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்டஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய நான்கு பேர் மட்டுமே ஆஜராகினர். திமுக அமைச்சர் பொன்முடிஅவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன் ஆகியோர்ஆஜராகவில்லை. அவர்கள் மூன்று பெரும் ஆஜராகாதது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தரப்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை இவ்வழக்கில் அரசுதரப்பின் முதல் சாட்சியான ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், 2-ம் சாட்சியான ஓய்வுபெற்ற கிராம நிர்வாகஅலுவலர் விஜயகுமாரன் மற்றும்

பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், புவியியல் மற்றும்சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி,  6 வதாக நிலஅளவைத்துறை முன்னாள் துணைஆய்வாளர் நாராயணன் என 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் கிருஷ்ணமூர்த்தியை தவிர்த்துமற்ற 5 பேரும் அரசு தரப்புக்கு பாதகமாகவும் திமுக அமைச்சர் பொன்முடி க்கு ஆதரவாகவும்சாட்சியளித்துள்ளனர்.

இதில் செம்மண் குவாரியில் தணிக்கை செய்தது தொடர்பாகவும், இவ்வழக்கு சம்பந்தமாகவும் தங்களுக்குஎதுவும் தெரியாது என ரமேஷ், கோபாலகண்ணன் உள்ளிட்டவர்கள் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம்அளித்தனர். பின்னர் அவர்களிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். அவரைதொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் ஆனந்தநாராயணன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்றசாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் இன்றும் நடைபெறும் என நீதிபதிபூர்ணிமா உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக அரசு ஊழியர்களால் புகார் கொடுக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வழக்கு விசாரணையில் ஆளுங்கட்சி அமைச்சர் என்பதால் அவரைஎதிர்த்து சாட்சி சொல்வதற்கான சூழல் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்கள் சாட்சியமாகசேர்க்கப்பட்டவர்கள் அரசு தரப்புக்கு எதிராகவும் ஆளுங்கட்சி அமைச்சரான உயர் கல்வித் துறை அமைச்சர்பொன்முடிக்கு சாதகமாகவும் சாட்சி மளித்து வருவதால் செம்மண் குவாரி முறைகேடு வழக்கை நீர்த்துப்போகசெய்யும் செயலில் விடிய திமுக அரசு ஈடுபட்டு வருவது அப்பட்டமாக தெரிகிறது.

இந்த நிலையில் 8/ 9/ 2023 விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக அமைச்சர் பொன்முடிமற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி உள்ளிட்டவரால் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய்வருவாய் இழப்பு தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.