தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை 
கள ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ..., அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற நிலை மற்றும்செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.30.87 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கரசங்கால் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதி– 1 திட்டத்தின் கீழ் வீடுகளின் சிறுபழுது மற்றும் வர்ணம் அடிக்கும் பணிக்கு ரூ.50,000 வீதம் 86 வீடுகளுக்கும் மற்றும் இதர கட்டமைப்புபணிகளுக்கு ரூ.27.07 இலட்சத்தில் செலவினம் மேற்கொண்டு பணிகள் முடிவுற்றதை தலைமை செயலாளர்அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாற்றங்கால் பண்ணைபார்வையிடப்பட்டது.  மேற்படி ஆய்வின்போது வனத்துறையில் உள்ளது போல் 0.45 செ.மீ உயரம் உள்ளஉரப்பைகளை ஊரக வளர்ச்சி துறையிலும் பயன்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் செரப்பனஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் பகுதியில் 60,000 லிட்டர்கொள்ளளவு  கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 640 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருவது ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் 2022-23 கீழ் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக நான்குவகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம் ரூ.69.17 இலட்சத்தில் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

வைப்பூர் ஊராட்சியில் அம்ரூத் சரோவர் திட்டத்தில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்ட நிதியில்திருவரம்புத்தேரியில் சிறு பாசன ஏரி தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை  ஆய்வு செய்தார்.

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் 2021-22 ஆம் ஆண்டிற்கானஅனைத்து கிராம அண்ணா மறுமல்ர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.25.35 இலட்சத்தில் கட்டப்பட்டு தற்போது பூசு வேலை நடைபெறுவது ஆய்வு செய்தார்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான கழிவறை கட்டடம் ரூ.5.70 இலட்சம் மதிப்பீட்டில்கட்டப்பட்டு வருவது ஆய்வு செய்யப்பட்டது. நாவலூர் காலணி ஆலமர தெரு மற்றும் அம்பேத்கர் தெருவில்ரூ.3.82 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலைகள்  ஆய்வு செய்தார்.

மேலும் காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு 1.42 கோடி மதிப்பில் 31 குடியிருப்புகள்கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அரசு முதன்மை செயலளர் திருமதி. பெ.அமுதா, ..., ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அகமது ..., மாவட்ட ஆட்சியர் மரு.மா.ஆர்த்தி, ..., திட்டஇயக்குநர் திரு.சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.