இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(20-08-2022) தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலினை இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத்துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும்இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி ஷாகுல்ஹமீது ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது முதலமைச்சரிடம் தெரிவித்ததாவது:  கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙளின் தேசிய அளவிலானசமய நல்லிணக்கப் பயணமாகதேசநேச திருப்பயணம்மேற்கொண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில்பயணம் முடித்து தமிழ்நாட்டுப் பயணத் தொடக்கமாக வருகிற செப்டம்பர் 2-ந் தேதி சென்னை ராயபுரம் ரம்ஜான்மஹாலில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் தளபதி மு.கஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரைவழங்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அதே நாளில் தென்மாநிலமுதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு  2 தமிழக அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில்நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்கவிருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதலமைச்சர்இசைவு தந்துள்ளார். மேலும் சமுதாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எல்லாதகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர் எல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலனைசெய்வதாக உறுதி அளித்தார்.