பாடலாசிரியரான இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புது முகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் பாராட்டுக்களைப் பெற்ற ஆட்சியரான வெ.இறையன்பு தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆட்சிப் பணியைத் தாண்டி சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகிய பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இவரின்உலகை உலுக்கிய வாசகங்கள்‘, ‘போர் தொழில் பழகுபோன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகின்றன. இந்நிலையில், ஓம் ஜெயம் தியேட்டர் தயாரிப்பில் ரிஷி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும்பியூட்டிஎன்கிற திரைப்படத்திற்கு இறையன்பு 2 பாடல்களை எழுதியுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.*********