“பாலன் தி பாய்” ஜூன் 19ல் வெளியீடு

“பால்ன் தி பாய்” திரைப்படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு  மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” படத்தை அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் காணொளியை பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். *********

டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த பயண அனுபவத்தை அளிக்கிறது. சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் தி பாய் திரைப்படம், தனித்துவமான கதைசொல்லல் பாணியைக் கொண்ட இரு புகழ்பெற்ற படைப்பாளர்களை இணைக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.