அரசு மருத்துவர் ஊதியக் கோரிக்கையை ஏற்க முதல்வர் முன்வரவேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள்

கடந்த 12 ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழியில் போராடிவரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கூட செய்யாமல் மாறாக, அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரசின் போக்கைக் கண்டிக்கிறேன்.

கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மகத்தான மருத்துவப் பணி மேலும் தொடர வழிவகை செய்திடவும், சட்டப் போராட்டக் குழுத் தலைவர் உள்ளிட்ட மூவரின் தண்டனையை ரத்து செய்திடவும் தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.