சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  . பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின்  இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி  படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.