‘தமிழன் விருது’ வாங்குவதில் சந்தோசம் அதிகம் – இயக்குநர் சேரன்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 10ஆம் ஆண்டுதமிழன் விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் நடிகர் சேரன் விருதின் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேடும்போது கூறியதாவது:  தமிழன் விருதுகளை அறிமுகப்படுத்துவதற்காக இந்தநிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சிதமிழன் என்று சொல்லும்போதே ஒரு சந்தோஷம்.. எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வாங்கலாம்.. ஆனால் நம் தாய்மொழியான தமிழன் விருது என்கிற பெயரில் வாங்குவது ஒரு பெரிய சந்தோஷம்.. பெரிய பாக்கியம்.. அந்த சந்தோஷத்தை இளம் சாதனையாளர்களுக்கும் சாதித்தவர்களுக்கும் வழங்கி மகிழ்வது என்பதை பெரிய வழிகாட்டுதலாக தான் பார்க்கிறேன். சாதித்தவர்களுக்கு விருது கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.. சாதிக்க போகிறவர்களுக்கும் விருது கொடுக்கிறார்களேஅதைத்தான் தனித்தன்மையாக பார்க்கிறேன்.********

அதனால் ஈர்க்கப்பட்டே இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன். நல்லதை செய்.. இல்லையென்றால் நல்லதை செய்பவர்களுடன் உடனிரு.. நல்லது செய்பவர்களை பாராட்டு..நல்லது செய்பவர்களை துளியும் தவறாக பேசாதே.. அந்த விதமாக நல்லதை செய்யும் உங்களோடு கைகோர்த்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. வெறும் ஆற்றலால் மட்டும் சாதித்து விட முடியாதுஅனுபவத்திற்கு சாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காதுஇங்கே அனுபவமும் ஆற்றலும் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சிஎப்போதும் போல நீங்கள் புதிய தலைமுறையாக புதிய தலைமுறைகளுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள்என்று கூறினார்

மேலும் இந்நிகழ்வில்புதிய தலைமுறை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜாமணிசெய்தி இயக்குனர் ஸ்ரீநிவாசன்செய்தி பிரிவு செயல் ஆசிரியர் திருப்பதிநிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல்மற்றும் நிகழ்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் பேசும்போது,செய்திகளைக் கடந்து கலைஇலக்கியம்பொருளாதார நிகழ்வுகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒருசில முயற்சி தான் எங்களது இந்த முயற்சிகள்சாகித்ய அகாடமி விருதுபத்ம விருது பெற்றவர்கள் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் தமிழன் விருது என்றால் இசைந்து இதில் பங்கேற்று எங்களை பெருமைப்படுத்தியதுடன் தங்களையும் மேன்மைப்படுத்திக் கொண்டார்கள்என்று கூறினார்.

ஆக-11ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள இந்த விழாவின் ஒரு பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்ட தொகுப்பாளினி தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்தநிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருக்கும்.