“சத்தமின்றி முத்தம் தா” திரைப்பட விமர்சனம்

எஸ்.கார்த்திகேயன் தயாரிப்பில் ராஜ்தேவ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்சத்தமின்றி முத்தம் தா‘. கார்விபத்தில் அடிபட்டுக்கிடக்குக் பள்ளிப்பருவத்துக் காதலி பிரியங்கா திம்மேஷை, ஶ்ரீகாந்த்மருத்துவமனையில் தனது மனைவி என்றுகூறி சேர்க்கிறார். விபத்தில்  பழைய நினைவுகளை இழந்தபிரியன்கா ஶ்ரீகாந்துடன் சில காலம் வாழ்கிறார். அவருக்கு நினைவு திரும்பும் போது ஶ்ரீகாந்த் தனதுகணவர் இல்லை என்பது தெரியவருகிறது. அப்படியென்றால் ஶ்ரீகாந்த் யார்? பிரியங்காவின் கணவர் யார்? என்பதை பல அதிரடி திருப்பங்களுடன் காட்சிப்படுத்துவதுதான் கதை.  கதைக்கேற்ற நடிப்பைகொடுத்து ஶ்ரீகாந்த் அசத்தியிருக்கிறார். நீண்ட இடைவெளிகளில் தேங்கிக்கிடந்த உணர்ச்சிகளைஇப்படதில் கொட்டித்தீர்த்துள்ளார். கணவர் யார் என்று தத்தளிக்கும் காட்சியில் பிரியங்கா பிரமாதம். ஆண்டரியாவின் பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆடவைக்கிறது. திரைக்கதை ஓட்டத்தில் நேரம்போவதே தெரியாமல் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ராஜ்தேவ் பாராட்டுக்குரியவர்.