தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர்

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில்தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படிமத்திய அரசு (ஒன்றிய அரசு) தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்,  வரலாறு காணாத வகையில் டீசல் விலை உயர்வு ஒருபுறம்அரசுக்கு  முறையாக செலுத்த வேண்டிய வரி மறுபுறம்விற்பனைக்கு எடுத்துச் செல்லும் செலவுகள் என  ஏற்கெனவே மீனவர்கள் திண்டாடி கடலுக்கு சென்றுவலைவிரித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். கொரோனாவால் பலர் வேலைவாய்ப்பு இழந்து வரும் சமயத்தில்இச்சட்டத்தின் மூலம்  நேரடியாகவும்மறைமுகமாகவும் மீன்பிடி தொழிலை நம்பி இருப்பவர்களின் வேலைவாய்ப்பும்வாழ்வாதாரமும் நசிந்து போகக்கூடிய சூழலை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.  அதுமட்டுமின்றிகடல்சார் இறைச்சி பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாகியுள்ளது.  உண்மையில் இச்சட்டத்தின் மூலம் எளிய மக்களே பாதிப்படைய உள்ளார்கள். அரசின் வருவாய் தேவைக்காக எளிய மக்களின் மீது சுமையேற்றுவது நியாயமற்றது இந்த கடினமான சமயத்தில்கடலில் எல்லைகளை வரையறுப்பதுஅனைத்து வகை படகுகளுக்கும் கட்டணம் விதிப்பதுஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும்போதும் அனுமதி பெற செய்வதுஅனுமதி பெறாதவர்களுக்கு அபராதம்சிறைத் தண்டனை விதிப்பதுஎப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு பகுதியையும் மீன்பிடி தடை பகுதியாக அறிவிப்பதுஅனுமதி பெற்ற வலையை தவிர பிற வலையை உபயோகிக்கக்கூடாது என்பது உள்ளிட்டமீனவர்கள் விரும்பாத பல அம்சங்களுடன்தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. துரிதமாக இத்தகைய சட்ட மசோதாவை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். மீனவர்களின் உணர்வுகளுக்கும்பொருளாதார பின்னடைவால் துயரத்தில் உள்ள மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுசட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும்எக்காரணத்தை கொண்டும் இத்திட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.