தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன் திட்டப் பகுதிகளில் 770 குடியிருப்புகள் ரூ.134.26 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

Jமாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்  (9.7.2023) ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடி மதிப்பிலான 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் கூறியதாவது:  இன்று டாக்டர் தாமஸ் சாலை திட்ட  பகுதியில் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 300 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.77.74 கோடி மதிப்பில் 470 புதிய குடியிருப்புகள் கட்டவும்,  சுபேதார் கார்டன் திட்டப் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 256 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.56.52 கோடி மதிப்பில் 300 புதிய குடியிருப்புகள் கட்டவும், இன்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 18 மாத காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்கப்பட்டு, இதில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒப்படைக்கப்படும்.

கழக அரசு பொறுப்பேற்ற உடன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ததில், சென்னையில் 27,038 குடியிருப்புகளும், மாநிலத்தின் இதர நகரங்களில் 3,354 குடியிருப்புகளும் என மொத்தம் 30,392 குடியிருப்புகள், காலநிலை மாற்றம் நீண்ட நாள் பயன்பாட்டால் சிதிலமடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இந்த குடியிருப்புகளை மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரூ.2,400 கோடி மதிப்பில் 15,000 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக, சென்னையில் 10 திட்டப் பகுதிகளில்உள்ள 3934 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டும், 11 திட்டப்பகுதியில் 2258 குடியிருப்புகள்இடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 20 திட்டப் பகுதிகளில் 7,175 புதிஅடுக்குமாடிகுடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.  ரிரு மாதங்களில்கட்டுமானப்பணிகள் துவங்கப்படும்.  19 திட்டப் பகுதிகளில் 6805 குடியிருப்புகள் இடிக்கும் பணிவிரையில் தொடங்கப்பட உள்ளது.  புதிய தொழில் நுட்பங்களை கொண்டு கட்டுமானங்கள்மேற்கொள்ளப்படவுள்ளதால் மிக குறுகிய காலத்தில் கட்டிடங்கள் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

                  இந்த நிகழ்ச்சியில் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப., ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், பணிகள் குழு தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், வாரிய  தலைமை பொறியாளர்  திரு.வே.சண்முகசுந்தரம்  , அரசு அலுவலர்கள் மற்றும்  வாரிய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.