சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 2024 – யொட்டி நடைபெற்று வரும் அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாள ர்டாக்டர். .மணிவாசன் ..., முன்னிலையில்  (5.01.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 யொட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, தொழில், முதலீடுமற்றும் வர்த்தகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளி கல்வித்துறை,  உயர்கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, செய்தி மற்றும்மக்கள் தொடர்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சி.எம்.டி., ஆவின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின்அரங்கங்கள் – 47, ஒன்றிய அரசு நிறுவனங்களின் 2 அரங்கங்கள், பிற மாநில அரசு அரங்கங்கள் – 2 எனமொத்தம் – 51 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

இந்த பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு துறை அலுவலர்கள் மற்றும் அரங்கம்அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களிடம் அறிவுருத்தினார்.பின்னர்  செய்தியாளர்களிடம்சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது, சென்னை தீவுத்திடலில் 9.1.2024 அன்று 48 வது இந்திய சுற்றுலா மற்றும்தொழில் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்பொருட்காட்சியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள்திறந்து வைக்க இசைவு தெரிவித்துள்ளார். 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 – யொட்டி அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள், மேடை அமைக்கும் பணிகள், பொருட்காட்சி முகப்பு அமைக்கும் பணிகள்  முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் .கமலா உள்படசுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.