தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,37,563  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 2,81,96,899 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று (14.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி...., அவர்கள் முன்னிலையில்மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்  ஆய்வு மேற்கொண்டார்.

 இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின்  நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிகஅளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899  ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,37,563  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளார்கள். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல்21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்2,81,96,899  உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளைஅறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் சுற்றுலாத்துறைக்கு தொழில் அந்தஸ்தை வழங்கும் சுற்றுலாகொள்கையை வெளியிட்டுள்ளார்கள். சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோரசுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல்சுற்றுலா, MICE சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப்பிரிவுகள் கண்டறியப்பட்டு சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்குபூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும்கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்வாய்ப்புகள் குறித்து, தங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தெரிவித்து புதியசுற்றுலா தலங்களின் உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கு பணியாற்றிட வேண்டும்.

 சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலகசுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் இரா.வீருசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொதுமேலாளர் .கமலா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் .புஷ்பராஜ் உள்படசுற்றுலாத்துறை உதவி இயக்குநர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.