வசந்த் ரவி நடித்த ‘பொன் ஒன்று கண்டேன்’ ஜியோ தளத்தில் வெளியானது

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்என மும்முரமான கதை க்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான்பொன் ஒன்று கண்டேன்’.  ஜியோ சினிமாஸில்இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதுபற்றி வசந்த் ரவி கூறும்போது, ‘நிறைய பேர் என்னிடம்எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம்கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும்பொன் ஒன்று கண்டேன்படம்வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ்கேட்டேன். அதன் பின்பு அவருடனேயேஜெயிலர்படத்தில் நடித்தது எனக்கு  மிகப்பெரிய பெருமை. என்றார்.*********

உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமைஎன்று ரஜினி சார் சொன்னார்.  அதுஉண்மையிலேயே பெரிய விஷயம்

அடுத்துவெப்பன்என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திராஎன்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது.

ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதுஎப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்னஎன்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பதுஎனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“பார்ட்2க்கானலீட் இருக்கு சார்என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்படங்கள்சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்குபொன் ஒன்று கண்டேன்படம் பிடித்திருப்பது மகிழ்ச்சிஎன்றார். வித்தியாசமான படங்களில்  நடித்து மீண்டும் உங்களை சந்திக்கிறேன்அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.