‘வல்லவன் வகுத்ததடா’ திரைப்பட விமர்சனம்

வினாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம்  ‘வல்லவன் வகுத்ததடா’.  தேஜ் சரண்ராஜ், ராஜேஸ் பாலசந்திரன், அனன்யா மணி ஆகியோர் நடித்துள்ளார்கள். மஹாபாரதப்போரில்  அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போதித்த கீதா உபதேசமான  ‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்”  என்ற வாசகங்களுக்கு நவீனகால கதை எழுதி படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படம் பாராட்டும்படி உள்ளது. குறைந்த முதலீட்டில் வெளிவந்த சிறந்த படமாகும். *******