அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில்
பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

உடன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், மாவட்ட திமுக அவைத்தலைவர் முகமது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பு பார்த்திபன்,அரசுத்துறையின் அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.