கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக Covid-19 காலங்களில் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உதிரம் கொடுத்து உதவிய குருதிக்கொடையாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக அம்பாசமுத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் L.பிரான்சிஸ், சிறப்பு விருந்தினராக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் S.வெங்கட்ராமன் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந் நிகழ்ச்சிக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் A.முகமது முகைதீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பசுமை தோழர்கள் அமைப்பிற்கு, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் மூலமாக மரக்கன்றுகள் நடுவதற்கு போரிங் இயந்திரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் பேராசிரியர் விஸ்வநாதன் தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழுவின் பாலசுப்பிரமணியம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளையைச் சார்ந்த அலிம் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தார்கள்.