கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின்

கிறிஸ்துவ மதத்தையும், கிறிஸ்துவ இன மக்களையும் இழிவுப்படுத்தி கலவரத்தை தூண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவர் மார்டின் சென்னை நகர காவல்த்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் சென்னையில் வசித்து வருகிறேன். எனது பூர்வீகம் கன்னியாகுமாரி குளைச்சல் பகுதியை சேர்ந்தவன். இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவைராக உள்ளேன். எனது செல்போனில் வாட்ஸ்அப்பில் நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கிறிஸ்துவ மக்களின் மனதை புன்படும் விதத்தில் ‘எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் இருக்க கூடிய கிறிஸ்தவ சகோதரர்களால், கிறிஸ்தவ மத கிரிமினல்களால் இதே கிறிஸ்துவ மதத்தினர் ஓட ஓட துரத்தி அடிக்க கூடிய காலத்தை இந்த நாடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இது நடந்தே தீரும், நடந்து கொண்டே இருக்கிறது. அது ஒட்டுமொத்தமாக நடக்க கூடிய நிலை உருவாகும்”. என்று பொது மேடையில் பேசியுள்ளார். இதனால் இவரது பேச்சானது கிறிஸ்தவ மக்களை பாதிப்படையும் நிலையில் மனம் புண்படும் விதத்திலும், மக்களிடையே கிளர்ச்சியை தூண்டி வன்முறை வெடிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இது சம்மந்தமாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் தாங்கள் இந்த புகார் மீது நடவடிக்கை எக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.