குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார், ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன்.