கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்; அமைச்சர் கே.என். நேரு!

செங்கல்பட்டு, ஜூலை. 16: சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் போரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இடத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு. அரசு அதிகாரிகள் உடன் உள்ளனர்.