கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தை களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.அமராவதி  ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களில் 11 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.2 லட்சத்து 10 ஆயிரத்து 436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு க்கு இதுவரை 9 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அங்கு, கொரோனாவில் பலியாவோரின் இறுதி சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல், கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.