கொரோனா நிவாரண உதவிகளை; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்!

திருப்பத்தூர், ஜூலை. 10- திருப்பத்தூர் மற்றும் ஏலகிரிஸ் பகுதியில் ஒய்.எம்.சி.எ. ஆண்கள் பிரிவு சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைப்பெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்டுகளை வழங்கினார். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒய்.எம்.சி.எ. ஆண்கள் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.