ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்!

தருமபுரி & கிரிஷ்ணகிரி, ஜூலை. 10- குடிநீர் விநியோக பணிகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என் நேரு.
தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமம் மற்றும் கிரிஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், ஊராட்சி ஒன்றியம், ஜகதாப் ஊராட்சியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மரு. செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஷ்வரன் மற்றும் ஒய். பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.