அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 10- செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கிராம தொழித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர். க. செல்வம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன்,
அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, பாபு. மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.