சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன் வி.ஐ.டி பல்கலை கழக துணை தலைவர்
ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பு பார்த்திபன்,
அரசுத்துறையின் அதிகாரிகள் மற்றும் பலர்
உடனிருந்தனர்.